என்னை விட்டு போகாதே – பாகம் 1
பரிதிக்கு வயது முப்பத்தி ஒன்று. மும்பையில் இருக்கும் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறான். தனது இருபத்து ஏழு வயதில் தான் விரும்பிய பெண் சுகிர்தா வை திருமணம் செய்ய நினைத்திருந்தான். பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அவள் கடைசி நேரத்தில் அவளுடைய பெற்றோர் விருப்பப்படி வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டாள். அப்போது சென்னையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பரிதி மனமுடைந்து அங்கு இருக்க பிடிக்காமல் விரும்பிக் கேட்டு மும்பைக்கு மாற்றலாகி வந்தான். விவாகரத்தாகி மகன் பரிதிக்காகவும் மகள் …