எந்திர லோகத்து சுந்தரன் என் மகன்
பறக்கும் கார்களும்…சுற்றிலும் பசுமையுமாக சென்னை மாநகரம் அழகில் மின்னியது. மெரினா கடற்கரையில் கட்டழகிகள் அரைகுறை ஆடையில் சூரிய குளியல் எடுத்துக்கொண்டு இருந்தார்கள். ஆம் இது ஒரு வருங்கால கதை. வருடம் 2129. அறிவியல் வளர்ச்சியின் உச்சத்தில் பல விஷயங்கள் மாறி இருந்தது. மனிதர்களின் வாழ்க்கை முறையும் தேவைகளும் மாறியிருக்க. நாம் பார்க்க போவது இரு காதல் பறவைகளின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைத்தான். சுலோச்சனா அவனை சென்ற வருடம் திருமணம் செய்து இருந்தால். அவன் ஒரு திறமைசாலி …